×

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி கிலோ ரூ.15க்கு விற்பனை

பாவூர்சத்திரம், மார்ச் 19: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் கிலோ ரூ.15க்கு விற்பனையானது. கீழப்பாவூர் வட்டாரத்தில் 100க்கு 98 சதவீத விவசாயிகள்  நெல் நடுவை செய்து அறுவடை செய்து விட்டனர்.  மீதியுள்ள விவசாயிகள் தான் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் கத்திரிக்காய் மற்றும் இதர காய்கறிகள் பயிரிடப்பட்டு மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டு கடந்த வாரம் முழுவதும்  கத்தரிக்காய் 5 டன் முதல் 10 டன் வரை விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் இருந்ததால் கத்தரிக்காய் ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது.
ஆனால், தற்போது கத்தரிக்காய் மகசூல் அமோகமாக உள்ளதால்  பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று மட்டும் 20 டன் முதல் 30 டன் வரை கத்தரிக்காய் விற்பனைக்கு வந்து குவிந்தது.
தற்போது விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் மார்க்கெட்டில் கத்தரிக்காய் கிலோ ரூ.15 வீதம் விற்பனையானது. இதனால் கத்தரிக்காய் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி