×

புளியங்குடி அருகே மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லை, மார்ச் 19: புளியங்குடி அருகே மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். புளியங்குடி அருகே துரைச்சாமிபுரம் அருகே நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், எஸ்ஐ ஷேக் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் மொபட்டில் மூட்டையுடன் வந்தவரை மடக்கினர். சோதனையில் மூட்டையில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மொபட்டில் வந்தவர், துரைச்சாமிபுரத்தை சேர்ந்த சண்முகநாதன் (42) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை மாவட்ட உணவு
கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சண்முகநாதனை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Puliyangudi ,Mobit ,
× RELATED தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி