×

அனுமதியின்றி சுவர் விளம்பரம் அமமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு

குளத்தூர்,மார்ச் 19:  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலை யொட்டி தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குளத்தூர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராமங்களில் வருவாய்துறை அதிகாரிகள், தேர்தல் விதிமுறை  குறித்து அந்தந்த பகுதி கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் தெரிவித்ததுடன் அகற்றப்படாத சுவர் விளம்பரங்கள் மற்றும் கொடிகம்பங்களை அகற்றினர். இதையடுத்து தருவைகுளம் அருகே உள்ள அனந்தமடம் பச்சேரி கிராமத்தில் அனுமதியின்றி வீட்டு சுவர்களில் அமமுக மற்றும் திமுக கட்சி சின்னங்கள் வரையப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை தாசில்தார் நடராஜன், தருவைகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அமமுக கிளைசெயலாளர் சந்திரன், திமுக செயலாளர் பாலமுருகன் இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Tags : persons ,wall advertiser ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...