கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் மார்ச் 26ல் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டி, மார்ச் 19: கோவில்பட்டி தலைமை தபால் அலுவலக முதலாவது தளத்தில் உள்ள அஞ்சலக முதுநிலை கோட்ட கண்கணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி மதியம் 3 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி பகுதி வாடிக்கையாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தபால் பணிகள் தொடர்பாக குறைகள் மற்றும் தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளை உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். மேலும் நேரில் வர இயலாத வாடிக்கையாளர்கள் தபால் மின்னஞ்சல் முகவரியான dokovilpatti.tn@indiapost.gov.in-ல் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 23ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இத்ததகவலை கோவில்பட்டி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சாந்தகுமார்  தெரிவித்துள்ளார்.

Related Stories: