×

தேர்தல் விதிமுறை மீறியதாக தேமுதிக நிர்வாகி மீது வழக்கு

உடன்குடி,மார்ச் 19: தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சி கொடி கட்டி சென்ற தேமுதிக அவைத்தலைவர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் பறக்குபடை தாசில்தார் செந்தூர் ராஜன் தலைமையில் வாகன சோதனையில்  மெஞ்ஞானபுரம் பகுதியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சி கொடியுடன் வந்த காரை மறித்து சோதனையிட்டனர். காரில் ஏதும் சிக்கவில்லை. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் தேமுதிக கட்சி கொடியுடன் வந்ததாக கூறி மெஞ்ஞானபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் மன்னார்புரத்தைச் சேர்ந்த நெல்லை மாடசாமி என்பதும், அவர் நெல்லை தெற்கு மாவட்ட தேமுதிக அவைத்தலைவர் பதவி வகித்து வருவதும் தெரியவந்தது.  இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : DMDC ,
× RELATED மாநிலங்களவை எம்.பி. பதவியை...