×

புகையிலை விற்றவர் மீது வழக்கு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து வியாபாரி மீது  போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.  சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ்(54). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் லூயிஸ்லாரன்ஸ் மற்றும் போலீசார்  கடையில் சோதனை நடத்தினர். அப்போது  விற்பனைக்கு  வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் 31 பாக்கெட்டுகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக அற்புதராஜ் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : seller ,
× RELATED புளியந்தோப்பில் குட்கா விற்றவர் கைது