கடையில் திருடியவர் கைது

ஸ்பிக்நகர்: முள்ளக்காடு அருகே உள்ள சாந்திநகரில் மளிகை கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார். முள்ளக்காடு சாந்திநகர் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த்(43). இவர் முள்ளக்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2மணி அளவில் உப்பளத்திற்கு வேலைக்கு செல்வதற்காக அதே பகுதியை சேர்ந்த சடைராஜ் மற்றும் சுந்தரம் இருவரும் முள்ளக்காடு பகுதிக்கு வந்தனர். அப்போது ஆனந்தின் கடையில் ஒருவர் உள்ளே நுழைவதை பார்த்ததும் ஆனந்த்க்கு தகவல் கொடுத்தனர். ஆனந்த் வந்தவுடன் கடையில் திருடிகொண்டிருந்த குலையன்கரிசல் மேலத்தெரு பாண்டி மகன் பாலமுருகன்(32). என்பவரை பிடித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாலமுருகனை கைதுசெய்தனர்.

Related Stories: