பைக் திருடியவர் கைது

ஸ்பிக்நகர்: ஸ்பிக்நகர் அருகே பைக் திருடியவர் கைது செய்யப்பட்டார். ஸ்பிக்நகர் அடுத்த பாரதிநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேஷ்குமார்(34). இவர் தன்னுடைய பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது பைக் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முத்தையாபுரம் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.

போலிசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தியதில் தங்கமணிநகர் 4வது தெருவை சேர்ந்த டேவிட்(21) என்பவர் தான் பைக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து டேவிட்டை கைது செய்த முத்தையாபுரம் போலீசார் அவரிடமிருந்த பைக்கை மீட்டனர்.

Related Stories: