சத்துணவு அமைப்பாளருக்கு மிரட்டல்: 3பேருக்கு வலை

உடன்குடி: மெஞ்ஞானபுரம் அருகே சத்துணவு அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.  மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சத்யாநகர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பால்துரை மனைவி ஞானசெல்வி (47). கல்விளையில் உள்ள பள்ளியொன்றில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். ஞானசெல்வியின் மகன் டூவிலரில் அவ்வப்போது வேகமாக சென்றுள்ளார். இதனை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஞானசெல்வியின் வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்வின், செல்வகுமார், மேகநாதன் ஆகியோர் சென்று தகராறில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜபுஷ்பம் என்பவர் தகராறில் ஈடுபட்டவர்களை சத்தம் போட்டு சமாதானம் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மூவரும் ராஜபுஷ்பத்தை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஞானசெல்வி அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: