விபத்தில் வேன் டிரைவர் பலி பேருந்து ஓட்டுனர் கைது

தொட்டியம், மார்ச் 19:  தொட்டியம்  அருகே உள்ள மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பாபு (34).  வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் பாபு தனது  மொபட்டில் திருச்சி-நாமக்கல் சாலையில் தொட்டியம் நோக்கி சென்று  கொண்டிருந்தார்.  அப்போது தோளூர்பட்டி பிரிவுரோடு அருகே வந்தபோது ஓசூர்  நோக்கிச்சென்ற அரசு பேருந்து மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட  பாபு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு பஸ்  டிரைவர் அருண் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: