பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திருச்சி, மார்ச் 19:  பொள்ளாச்சி பாலியல் விவகார சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று கோர்ட் புறக்கணிப்பு நடந்தது. இந்த போராட்டத்தில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த பணி புறக்கணிப்பில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதுபோல் மணப்பாறை, லால்குடி, முசிறி கோர்ட்டிலும் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: