பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்ற நடவடிக்கை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை,  மார்ச் 19: பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க வட்ட கிளையின்  சிறப்பு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க பட்டுக்கோட்டை வட்ட  கிளை தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில்  ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். பட்டுக்கோட்டை நகரில் மக்கள் பெருகிவரும் நிலையில் சுகாதாரத்தை  பேணிகாக்க பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு  ஓய்வூதியர் சங்க செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் சிவசாமி, இணை செயலாளர்கள்  பொன்முடி, ராமையன் மற்றும் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தனபதி  நன்றி கூறினார்.

Related Stories: