×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கும்பகோணம், மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கும்பகோணம், பாபநாசத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.  இதேபோல் பாபநாசம் கோர்ட்டில் வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான வக்கீல்கள் பங்கேற்றனர். இதனால் கும்பகோணம், பாபநாசம் கோர்ட்டில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tags : attorneys ,Pollachi Court ,
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா