தஞ்சை, மார்ச் 19: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள அம்மன்நகரை சேர்ந்தவர் சமுத்திரராஜன் (55). வல்லம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு பைக்கில் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சமுத்திரராஜன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.