×

அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதிய வாலிபர் மீது வழக்கு

புதுக்கோட்டை, மார்ச்19: புதுக்கோட்டை அண்ணாநகர் முதல் வீதியை சேர்ந்தவர் தர்மசீலம் (35). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி பகுதி மற்றும் பழைய அரசு மருத்துவமனை பகுதிகளில் உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தர்மசீலனை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...