×

தேசிய நெட்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கு தத்தனூரில் பயிற்சி முகாம்

ஜெயங்கொண்டம், மார்ச் 19: தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் பங்குபெறும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், தத்தனூரில் நடந்து வருகிறது. பெங்களூருவில் தேசிய அளவிலான 36வது சீனியர் பிரிவு ஆண்களுக்கான நெட்பால் போட்டி வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில் பங்கேற்கும் உள்ள தமிழக ஆண்கள் பிரிவு அணிக்கான நெட்பால் பயிற்சி முகாம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் எம்ஆர் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.

பயிற்சி முகாமை தாளாளர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி பிரிவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணியில் விளையாட கூடிய 12 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு தமிழ்நாடு நெட்பால் கழக பொது செயலாளர் பாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், சதீஷ், ரகுபால் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Tags : Training camp ,Tathanam ,Tamilnadu ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்