×

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அரியலூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

அரியலூர், மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்ற வழக்கை உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஐகோர்ட் கண்டனத்துக்கு ஆளான கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் 250க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags : Ariyalur ,attorneys ,incident ,Pollachi ,
× RELATED அரியலூர் நகராட்சி சார்பில் 100 சதவீத...