×

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மதனகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூர்,மார்ச் 19: பெரம்பலூர் அரு ள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோ விலில் பங்குனி உத்திரப் பெருந்திரு விழாவை முன்னிட்டு திருக் கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. நாளை (20ம்தேதி) திருத்தேரோட்டம் நடக்கிறது. பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த 11ம் தேதி அங்குரார்ப்பணம் நடந்தது. 12ம் தேதி கோயில் செயல் அலுவலர் மணி முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. 13ம் தேதி சிம்ம வாகனம், 14ம் தேதி அனுமந்த வாகனம், 15ம் தேதி ஷேச வாகனம், 16ம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோயில் செயல் அலுவலர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கீத்துக்கடை குமார், பூக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி தேருக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

Tags : Thirukkalai ,festival ,Madanapopala Swamy Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...