×

விஷம் குடித்து தற்கொலை

தொண்டி, மார்ச் 19: எஸ்.பி.பட்டினத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் சுமார் 45 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையோரம் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி