×

100 வேலை திட்ட தொழிலாளர்களிடம் திமுக எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம், மார்ச் 19:  ராஜபாளையம் அருகே, 100 நாள் திட்ட வேலை தொழிலாளர்களிடம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார். ராஜபாளையம் அருகே, தளவாய்புரம்-புத்தூர் சாலையில், ஜமீன்நல்லமங்கலம் ஊராட்சி பயனாளிகள் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாகச் சென்ற ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், அவர்களிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார். பின்னர் அவர்களிடம் பேசுகையில், ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியும் அமையும். அப்போது 100 நாள் வேலை திட்ட நாட்களின் எண்ணிக்கை 365 நாளாக உயர்த்தப்படும். இதற்கான சம்பளமும் 180 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்களை நமது தொகுதிக்கு கொண்டு வருவதற்கு, தென்காசி எம்பி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் அவர்களுக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களும் திமுகவுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தனர்.

Tags : MLA ,DMK ,job planners ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா