×

பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு

திருவில்லிபுத்தூர், மார்ச் 19: திருவில்லிபுத்தூர் அருகே, மல்லியை அடுத்த மாயத்தேவன்பட்டி கிராமத்தில்  தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு மாலை ஊரணிபட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (60), நாகபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (40) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பட்டாசு கழிவுகளை கொட்டியபோது தீப்பிடித்து இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மாரியப்பன் நேற்று மாலை இறந்தார்.  செந்தில்குமார் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : crash ,crash accident ,
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!