×

குடிநீர் வழங்க வலியுறுத்தி புலவர்சேரி மக்கள் சாலை மறியல்



சிவகங்கை, மார்ச் 19:  சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே புலவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூர் ஊராட்சியில் புலவர்சேரி கிராமம் உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இக்கிராமத்தில் இரண்டு போர்வெல் உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு போர்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நீர் இல்லாமல் போனது. இதனால் சுமார் இரண்டு கி.மீ தூரமுள்ள வெவ்வேறு கிராமங்களில் சென்றும் கேன் குடிநீர் வாங்கியும் குடிநீர் தேவைகளை சமாளித்து வருகின்றனர். இது குறித்து கடந்த ஆறு மாதமாக கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிவகங்கை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களில் சிலரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Tags : Pullivasiri ,road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...