×

காளையார்கோவிலில் ஓட்டு எந்திரம் செயல்விளக்கம்

காளையார்கோவில், மார்ச் 19:  காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் ஓட்டு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்கும் விதமாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓட்டு எந்திரம் மற்றும் ஓட்டுச்சீட்டு எந்திரம் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்பு தேர்தல் துணை வட்டாட்சியர் தர்மராஜ் மற்றும் காளையார்கோவில் மண்டல துணை வட்டாட்சியர் இளங்கோ ஆகியோர் பொதுமக்களுக்கு ஓட்டு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என விளக்கங்களைக் கூறினர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் உதவியாளர் கமலேஷ், வருவாய்த்துறை அதிகாரி மாரிமுத்து, கிராமநிர்வாக அதிகாரிகள் ரெத்தினம், இளையராஜா, பிரபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்