×

குடிதண்ணீர் கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம், மார்ச் 19: ஆர்.எஸ்.மங்களம் பகுதியை சேர்ந்த கைக்குடி, இளங்குளம், குடுப்புலி, பவளக்கனி  கிராம பொதுமக்கள் கிராமத்தில் பல பிரச்னைகள் உள்ளது. அடிப்படை தேவையான குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆர்.எஸ்.மங்களம் ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராமங்களில் குடிநீர் வசதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்படுவதாகவும், தண்ணீர் குடம் ரூ.10 கொடுத்து விலைக்கு வாங்கி குடிக்கிறோம். கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. அதிலிருந்து 4 கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என கூறி கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டனர். தேர்தல் பணிகள் நடைபெறும் வேளையில் பாதையை மறைத்து அமர்ந்த பெண்களை அதிகாரிகள் ஓரமாக இருக்க அறிவுறுத்தினர்.
அதிகாரிகளிடம் வயதான பெண்கள் குடிக்க தண்ணீர் இல்லை. ஏதாவது பண்ணுக என கெஞ்சினர். கலெக்டர் இல்லாத நிலையில் அதிகாரிகள் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.



Tags : Siege ,office ,Collector ,
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...