×

வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிப்பு அரசு மருத்துவமனையில் 34 பேருக்கு சிகிச்சை அதிகாரிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச்19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியிலுள்ள கிராமங்கள்,நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பலகிராமங்கள், மன்னார்குடி தாலுகாவில் ஒரு சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு வாரமாக வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் இது வரை சுமார் 1500 பேர் சிசிச்சைபெற்று சென்றுள்ளனர்.தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிசிச்சை பெற்று வருபவர்களை சென்னை பொதுசுகாதாரம் இயக்குனரகம் நிபுணர்கள் கோபிநாத், டாக்டர் ஆடலரசிஆகியோர் நேற்று பார்வையிட்டு பாதிப்புக்கான காரணம்
குறித்து கேட்டறிந்தனர்.

Tags : government hospital ,
× RELATED முற்றுகை போராட்டம்