பொதுமக்கள் குற்றச்சாட்டு எம்விஎம் கலைவாணி பள்ளி தாளாளருக்கு விருது

சோழவந்தான், மார்ச் 19: சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக இருப்பவர் டாக்டர்.எம்.மருதுபாண்டியன். இவரது சமூக சேவைகளைப் பாராட்டி ஏற்கனவே தமிழக கவர்னரால் சேவைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்விச்செம்மல், ஜாம்பவான் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறந்த பள்ளி நிர்வாகத்திற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவால் `விஜய் பாரத்’ என்ற தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற `உழைப்பால் உயர்ந்தோர் திருவிழா’ நிகழ்ச்சியில் உயர்நீதி மன்ற நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை `தங்க நட்சத்திரம்’ விருதை டாக்டர்.மருதுபாண்டியனுக்கு வழங்கி வாழ்த்தினர். அப்போது நடிகை லதா, டாக்டர்.சக்திவேல் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தினர். விருதுபெற்று சோழவந்தான் திரும்பிய தாளாளரை, எம்விஎம் குழுமத்தலைவர் மணி (எ) முத்தையா,பள்ளி நிர்வாகி வள்ளிமயில், முதல்வர் தீபாராகிணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related Stories: