திருப்பரங்குன்றம், மார்ச் 19: திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து ஒரு வாரத்தை கடந்தும் ஆளுங்கட்சி சின்னங்கள் மட்டும் அழிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஆனால் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர், வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள் சில இடங்களில் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளது.
குறிப்பாக, ஆளுங்கட்சி சின்னங்கள் மட்டும் அழிக்கப்படாமல் உள்ளது. இதே போல சில ஊர்களில் கொடிக்கம்பங்களில் கொடிகள் இறக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், `` ஆளும்கட்சிக்கு ஆதரவாக இப்போதிருந்தே அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால் சின்னங்களை அழிக்காமல் தேர்தல் ஆணைய உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினர்.