×

கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய மார்க்சிஸ்ட் வேட்பாளர்

மேலூர், மார்ச் 19: மதுரை தொகுதி மக்களவைக்கு போட்டியிடும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், நேற்று மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.
மேலூர் தங்க நாச்சியார் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் தலைமையில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மேலூர் நகர் திமுக செயலாளர் முகமது யாசின், ஒன்றிய செயலாளர்கள் குமரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகா செயலாளர் கண்ணன், நகர் செயலாளர் மணவாளன், கமிட்டி உறுப்பினர் ஜெயராமன் கலந்து கொண்டனர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கலைமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேலூர் நகர் தலைவர் திருஞானம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சியினர் என அனைத்து கூட்டணி கட்சியினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் வேட்பாளர் வெங்கடேசன் கூறியதாவது : தொழில் துறையில் பின் தங்கிய மதுரை மாவட்டத்தை முன்னிலை படுத்த பாடுபடுவேன். வேறுபாடின்றி அனைவரையும் கட்சி அனுமதியுடன் சென்று ஆதரவு கேட்பேன். மாவட்டத்தில் உள்ள 15 லட்சம் பேரையும் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளேன் என்று கூறினார். மேலூரை தொடர்ந்து கொட்டாம்பட்டியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வெங்கடேசன் ஆதரவு திரட்டினார்.


Tags : candidate ,Marxist ,coalition ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...