தேசிய கருத்தரங்கு நடனக்கலைஞர்கள் மூலம் திருப்பரங்குன்றத்தில் வாக்காளர் விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம், மார்ச் 19: திருப்பரங்குன்றத்தில் நடனக் கலைஞர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு நேற்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாக்களிப்பதன் அவசியம், ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம் மேலும் தேர்தல் நாளான ஏப்.18 ம் தேதி தேரோட்டத்திற்கும் போவோம், வாக்களிக்கவும் போவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தியபடி நடனக் கலைஞர்கள் நடனமாடினர். அத்துடன் நடித்தும் காட்டினர்.இந்த நிகழ்ச்சியை மாவட்ட வழஙகல் அலுவலர் பஞ்சவர்ணம் துவக்கி வைத்தார். தாசில்தார் நாகராஜ், துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Related Stories: