×

கார் மோதி டிரைவர் பலி

வாடிப்பட்டி, மார்ச் 19: சமயநல்லூரை சேர்ந்தவர் முருகன் வயது (50), சோழவந்தானைசேர்ந்தவர் சுபசங்கரபாண்டியன் வயது(45). இவர்கள் இருவரும் சோழவந்தான் அரசுபோக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வாடிப்பட்டியிலிருந்து முருகனும், சுபசங்கரபாண்டியனும் டூவீலரில் சோழவந்தான் சென்றனர். அப்போது ஆண்டிபட்டி பங்களா அருகே சோழவந்தான் பிரிவில் திரும்பியபோது மதுரையிலிருந்து கோவை சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலர் தூக்கி வீசப்பட்டதில் முருகனும், சுபசங்கரபாண்டியனும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைபலனின்றி நேற்று முருகன் உயிரிழந்தார்.


Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...