×

ஆதி காலம் தொடங்கி நவீன காலம் வரை சிறுதானிய உணவுகளால் ஏற்படும் பயன்கள்

நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத் தினை பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் நம் பாரம்பரிய உணவு முறையாக இருந்து வருகிறது. ஆதிக்காலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனிதர்கள் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறு தானியங்கள் குறிப்பிடத்தக்கவை யாக உள்ளது.
நாம் உண்ணும் அரிசியின் வழி மரபு தான் இந்த சிறுதானியங்கள். இவை நெற்பயிரை போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவி னை பெற்ற சிறுதானியங்கள் குறுகிய கால பயிராகும். அரிசி போன்ற வற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்த சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மைதாவில் தயாரிக்கப்பட்ட பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு துரித உணவுகளையே இன்று உண்ணுகின்றனர். இதனால் நம் உடல் நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஒத்துழைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து விடுகிறது. எனவே நம் உடல் நோய்களின் இருப்பிடமாக மாறி உள்ளது.

இத்தகைய தீங்குகளிலிருந்து நம்மையும் நம் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க ஒரே தீர்வு பழங்கால உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் சிறு தானியங் களான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் உட் கொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்காக உயர்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளும் குறைக்கப்பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய் கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பதாவது: எலும்பு வலுவடையும்: உடலின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச் சத்து க்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு களை வலுவடைய செய்கிறது. கொழுப்புகள் தடுக்கப்படுகிறது: சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப் பினை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் ‘பி’ ரத்தத்தில் உள்ள ஹோமோசை ஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோ டொன்று சேர்ந்து கொழுப்பு கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது.

புற்றுநோய் அபாயத்தில் மீளலாம்: சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச் சத்து மாற்றும் தாவர ஊட்டச் சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்று நோய் அபாயத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. லிக்னைன் மார்பக புற்று நோயி லிருந்து பாதுகாக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்தும் 50சதவீதம் குறைக்கலாம். கட்டுப்படுத்துகிறது நீரிழிவு நோய்: சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர் திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயனளி க்கிறது. தசைகள் சீரழிவதை குறைக்கிறது: சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.
அதிகரிக்கும் தாய்ப்பால் உற்பத்தி: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானிய ங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது. ஏனென்றால் கேழ்வரகு உடலின் மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறது.

மாதவிடாய் கால முதுகுவலிக்கு நிவாரணம்: சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு சிறந்த உணவாகக் கருதப்படு கிறது. ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலி யினை வராமல் தடுக்கிறது. முதுமையடைவதைத் தடுக்கிறது: தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளை தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதற்காக அழுகு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இளமையான சருமம் பெறுதல்: அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமை யுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்க செய்யும் செல்களை பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது. முகப்பருவினைக் குறைக்கிறது: சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளானக் கொழுப்புத் திசு உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

வீக்கம், அரிப்பை தடுக்கிறது: சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி மற்றும் பொடுகு போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபட சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
முடிஉதிர்வதை கட்டுப்படுத்தும்: சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. மன அழுத்தம் உடலில் கார்டிசோல் அளவினை அதி கரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பது முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழி வகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவை குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.
இளநரையை தடுக்கிறது: இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடை பெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக் கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...