தொடர் கால்பந்து

திண்டுக்கல், மார்ச் 19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2018-2019க்கான தொடர் கால்பந்து போட்டிகள் டிவிசன் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிமியர் டிவிசன் போட்டியில் ஜிடிஎன் கால்பந்து அணி 2 கோல் அடித்தும், காமராஜபுரம் கால்பந்து அணி 6 கோல் அடித்து ம் வெற்றி பெற்றது. தொடர்ந்து லயோலா கால்பந்து அணியும், அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. இரண்டாம் டிவிசன் போட்டியில் காந்திகிராமம் கால்பந்து அணி 4 கோல் அடித்து வெற்றி பெற்றது. மூன்றாம் டிவிசன் போட்டியில் ஜோசப் மில்ஸ் கால்பந்து அணி 2 கோல் அடித்தும், ஜூனியர் சோலார் கால்பந்து அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நான்காம் டிவிஷன் போட்டியில் பத்மாவதி பெருமாள் நினைவு கால்பந்து அணியும், ஏபிசி கால்பந்து அணியும் மோதியதில் 1:1 கோல் கணக்கில் சமநிலை பெற்றது என திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: