×

ரத்ததானம்

திண்டுக்கல், மார்ச் 19: திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ், மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, திண்டுக்கல் ஜிஹெச் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. கல்லூரி டீன் சுதா, ரெட்கிராஸ் மாவட்ட அவைத்தலைவர் காஜாமைதீன் தலைமை வகித்தனர். துணைத்தலைவர்கள் சரவணன், சேக்தாவூத், மாவட்ட செயலர் ராஜகுரு, புரவலர் அப்துல் ரகுமான், பொருளாளர் சுசீலாமேரி முன்னிலை வகித்தனர். முகாமில் யூத் ரெட்கிராஸ் தொண்டர்கள் 42 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் மருத்துவ அலுவலர் பிரபாகரன், திட்ட அலுவலர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...