பங்குனி மாத பிரதோஷ விழா

நத்தம், மார்ச் 19: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: