×

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு

கொள்ளிடம், மார்ச் 19: கொள்ளிடம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து வெளியேறியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து சோதியக்குடி செல்லும் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் செல்லும் குழாயில், நேற்று உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்ததால், சாலையின் நடுவில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று சாலையின் நடுவே ஏற்பட்ட பெரும் உடைப்பால் புத்தூரிலிருந்து சோதியக்குடி, சிதம்பரநாதபுரம், மாதிரவேளுர் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சீர்காழியிலிருந்து, புத்தூர் வழியாக மாதிரவேளுர் செல்லும் மினிபஸ்சும் நேற்று மாலை முதல் செல்லவில்லை. சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், குழாய் மூலம் தண்ணீர் செல்வதும் நிறுத்தப்பட்டது. புத்தூரிலிருந்து மாதிரவேளூர் செல்லும் போக்குவரத்து நேற்று துண்டிக்கப்பட்டது. உடனே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட உடைப்பை சரி செய்து உடைந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்