பழநி, மார்ச் 19: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை முதல் பழநி நகரம் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுதினம் (மார்ச் 21) நடக்க உள்ளது. இதையொட்டி தற்போதே ஏராளமான பக்தர்கள் பழநி நகரை நோக்கி தீர்த்தக்காவடியுடன் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘டிஐஜி தலைமையில் 2 எஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 1,500 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 30 மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட உள்ளனர்.