×

நன்மங்கலம் காப்புக்காட்டில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

தாம்பரம், மார்ச் 19: நன்மங்கலம் காப்பு காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. தாம்பரம் அடுத்த செம்பாக்கம் - திருமலை நகர் சாலையோரம் நன்மங்கலம் காப்புக்காடு உள்ளது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் இந்த காட்டின் ஒரு பகுதியில், வேங்கை வாசல்பகுதி அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியின்
பின்புறம் உள்ள மைதானம் அருகில் திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி செம்பாக்கம் - திருமலை நகர் செல்லும் வனப்பகுதி சாலை வரை பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், நன்மங்கலம் காப்புக்காட்டின் அருகில் உள்ள செம்பாக்கம், திருமலை நகர், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவலறிந்து தென்சென்னை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையில், தாம்பரம், வேளச்சேரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த 18 வீர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால், காப்பு காட்டில் சுமார் 10 ஏக்கரில் இருந்த மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா