×

கோயில் திருவிழா தகராறில் ஒருவர் மீது தாக்குதல் வெள்ளியணையில் கடையடைப்பு போலீசார் சமரசத்தால் வாபஸ்

கரூர், மார்ச் 19: வெள்ளியணையில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் போலீசார் தலையீட்டால் விலக்கி கொள்ளப்பட்டது. கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் 2014ம் ஆண்டு நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஒருவரை தாக்கியதால் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வெள்ளியணையில் நேற்று காலை கடையடைப்பு நடைபெற்றது. வெள்ளியணை பகுதியில் உள்ள 75க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளியணை போலீசார் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கடையடைப்பு விலக்கி கொள்ளப்பட்டு பிற்பகல் 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வெள்ளியணையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : temple festival ,dispute ,fishermen ,
× RELATED திருமயம் அருகே மேரிநகர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா