×

நாடகம் நடத்த தடையால் வாழ்வாதாரம் பாதிப்பு கரூர் கலெக்டரிடம் நடிகர்கள் கோரிக்கை மனு

கரூர், மார்ச் 19: நாடகம் நடத்த தடைவிதித்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் நடிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பில் பாலதண்டபாணி, அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, ஈட்டிகணேசன் மற்றும் நாடக நடிகர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் நாடக நடிகர் சங்கத்தில் 425 உறுப்பினர்கள் உள்ளனர். குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நாடக தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். நாடகம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி வழங்காத காரணத்தினால் குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
வருடத்தில் இந்த மூன்று மாதங்கள் மட்டுமே வருமானம் கிடைக்கும். எனவே நாடகம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Actors ,Karur Collector ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி