கரூர், மார்ச் 19:பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து கரூரில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் பாலியல் குற்றத்தில் நடைபெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும், இந்த சம்பவத்தை கண்டித்தும் நேற்று கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.