×

வேலூர் மாவட்டத்தில் 4 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று வருகை

வேலூர், மார்ச் 19: வேலூர் மாவட்டத்தில் 4 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று வர உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. அதேபோல் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10ம் தேதி இரவு முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. பணம், பரிசு பொருட்கள் கடத்தலை தடுக்க 39 பறக்கும் படை மற்றும் 39 நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை பார்வையிட 4 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இன்று வருகின்றனர். அதன்படி, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி தொகுதிகளுக்கு டெல்லி ரவிகாந்த் ஐஆர்எஸ் அதிகாரியும், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் தொகுதிகளுக்கு பெங்களூர் உஜ்வல்குமார் ஐஆர்எஸ் அதிகாரியும்,

திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் தொகுதிகளுக்கு எத்வீர்சிங் ஐஆர்எஸ் அதிகாரியும், ஆற்காடு, ராணிப்பேட்ைட, காட்பாடிக்கு ஜார்கண்ட் ஹரீஷ்குமார் ஐஆர்எஸ் அதிகாரியும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று வேலூர் வந்து அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பார்கள் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore district ,polling visitors ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...