வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி, மார்ச் 19:   இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு முகாம், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லியனூரில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைவரும் எதிர்வரும் தேர்தலில் கண்ணியமாக வாக்களிப்போம் என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி -2 அலுவலகம் மூலம் விவிபாட் இயந்திரம் பற்றிய செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது. உதவி மாவட்ட ஆட்சியர் ப்ரவிமால் அபிஷேக் பொல்லு மாட்டலா கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்து, அனைவரும் தேர்தலில் முறையாக பங்கெடுத்து கண்ணியமாக வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

Related Stories: