புதுவையில் அரைகம்பத்தில் தேசியக்கொடி

புதுச்சேரி, மார்ச் 19:    கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலமானார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.அவரது மறைவுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடயே மனோகர் பாரிக்கல் மறைவுக்கு புதுவையிலும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டசபை அலுவலகம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி நேற்று அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Related Stories: