கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணிக்கு உற்சாக வரவேற்பு

விழுப்புரம், மார்ச் 19: கள்ளக்குறிச்சித் தொகுதியில் திமுக வேட்பாளராக பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார். நேற்று சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்த  கவுதமசிகாமணிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழுப்புரம் நகர 14வது வார்டு திமுக நிர்வாகி ஏழுமலை தலைமையில் பிள்ளையார்கோயில் பேருந்துநிறுத்தம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் அவருக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் கணேஷ், செல்லதுரை, செம்மார் முருகன், தர், கோபி, ரமேஷ், கார்த்திக், சந்துரு, அஜித், மிலிட்டிரி ஏழுமலை, குரு, அருண், சுமன், கார்த்திக், சிவக்குமார், எழில், அரவிந்தன், சந்துரு, செல்லம்மாள், காயத்திரி, நதியா, சீனு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறிவாலயம் வரை தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Related Stories: