விழுப்புரம், மார்ச் 19: விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தனியே தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண் 1800 425 3861 ஆகும். இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.