×

முதியவரை தாக்கிய 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 19: உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(28). இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த ராஜ்குமார்(22), அருள்(23), விஜய்(22) ஆகிய 4 பேரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து எடைக்கல் காவல்நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் 4 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...