×

11 மாட்டுவண்டிகள் பறிமுதல்

பண்ருட்டி, மார்ச் 19: பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது அங்கு மணல் எடுத்து வந்த அதே ஊரை சேர்ந்த போன்மண்ணன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), எஸ்.கே.பாளையம் ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), தட்டாம்பாளையம் லட்சுமணன்(48), சிவராமன்(35), தட்சிணாமூர்த்தி(53),
எம்.ஏரிப்பாளையம்சுந்தரவேல்(39) ஆகியோர்களை கைது செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது