×

தேர்தல் விதிமீறல் குமரியில் இதுவரை ₹14.86 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், மார்ச் 19: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பானஅறிக்கை 10.03.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற பகுதிகளிலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடியவகையில் ஒரு சட்டமன்ற பகுதிக்கு ஒரு பறக்கும் படை குழு மற்றும் ஒரு கண்காணிப்புபடை குழு வீதம் ஆறு பறக்கும்படை குழுக்கள் மற்றும் ஆறு கண்காணிப்பு படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்று நாகர்கோவிலில் ரூ.1 லட்சம், 2 கார் என்று நேற்று வரை மொத்தம் 13 வாகனங்கள், ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்து 500ம், 11 மிக்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு