×

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலம் சமபந்தி விருந்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பு காலை 10 மணி தொடங்கி இரவு வரை நீடித்தது

சாமியார்மடம், மார்ச் 19: பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் நேற்று நடந்த சமபந்தி விருந்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 8 மணி வரை நீடித்தது.சாமியார்மடம் அருகே அமைந்துள்ள பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தல விழாவில் நேற்று முன்தினம் மும்மத பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு பழைய பள்ளி அப்பா அறக்கட்டளை தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். இதில் அறக்கட்டளை ெசயலாளர் டாக்டர் குமார், பொருளாளர் சுந்தர்ராஜ்  மற்றும் ெபாதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்று சமபந்தி விருந்து நடந்தது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் காலை முதல் ெதாடங்கியது. பக்தர்கள் சார்பில் காய்கறிகள், அரிசி பெருமளவில் வழங்கப்பட்டது. மொத்தம் 4 டன் காய்கறி, 10 டன் அரிசியால் அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டது. 250க்கு ேமற்பட்ட பக்தர்கள் உணவு தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். நேற்று காலை சிறப்பு பிரார்த்தனையை தொடர்ந்து 10 மணிக்கு சமபந்தி விருந்து தொடங்கியது. இரவு 8 மணி வரை நீடித்த இந்த விருந்து நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : participants ,Palliyadi Old School ,Samalpani Party ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...