×

மதுபாட்டில், புகையிலை விற்ற 16 பேர் கைது

திருப்பூர், மார்ச் 15: திருப்பூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில், புகையிலை விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் ஆத்துப்பாளையம், திலகர் நகர், அமர்ஜோதி கார்டன், வஞ்சிபாளையம், புதுக்காடு, குமரன்ரோடு, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் மாநகர போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, சக்தி (24), மாரிமுத்து (28), வீரபாண்டி (27), சதீஷ்குமார் (25), வேண்டியப்பன் (42), அழகர் (46), நாகப்பன் (37), தர்மராஜ் (46), செல்வம் (30), ஆரோக்கியபார்த்தி (30), வீரயைா (31), குமார் (37), கணேஷன் (28), ராமச்சந்திரன் (34) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பி.என்.ரோடு மற்றும் ஏ.பி.டி.ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மனோரஞ்சிதம் (42), பிரபாகரன் (23) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 86 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...